“புதுவருடத்தில் புறப்பட்ட முதல் விமானம்” – திருச்சி சென்ற 185 பயணிகள்.!

KL Trichy Vande Bharath
Image Tweeted by India in Malaysia

நேற்று வந்தே பாரத் திட்டத்தின் கீழ் (4 ஜனவரி 2021) கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு முதல் விமானம் 185 பயணிகளுடன் புறப்பட்டது. (KL Trichy Vande Bharath)

மலேசியாவில் செயல்படும் இந்திய உயர் கமிஷன் உதவியுடன் 185 இந்தியர்கள் தாயகம் திரும்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (KL Trichy Vande Bharath)

“இந்திய மாணவர்களின் கல்விக்கடனை ஏற்கும் சிலாங்கூர் அரசு”

அண்டை நாடான இந்தியாவை பொறுத்தவரை பன்னாட்டு விமான சேவை, இந்த ஜனவரி மாதம் 31ம் தேதி வரை தொடர்ந்து தடையிலேயே இருக்கும் என்று அந்நாட்டு அரசு அறிவித்தது.

இதனால் பிற நாடுகளில் இருந்து, குறிப்பாக மலேசியாவில் இருந்து மக்கள் பயணிக்க வந்தே பாரத் மூலம் செயல்படும் விமானங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் கோலாலம்பூர் முதல் தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு செல்லும் விமானங்களின் பட்டியலை அண்மையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டது.

தமிழகத்தை பொறுத்தவரை திருச்சி மற்றும் சென்னை ஆகிய இரு நகரங்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 04 2021 தொடங்கி ஜனவரி 25 2021 வரை அனைத்து திங்கள் மற்றும் இரண்டு புதன்கிழமைகளில் திருச்சிக்கு விமான சேவை அளிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜனவரி 7ம் தேதி 2021 தொடங்கி 28 ஜனவரி 2021 வரை அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் விமான சேவை சென்னைக்கு வழங்கப்பட உள்ளது.

இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. மேலும் வரும் 8ம் தேதி கோலாலம்பூர் – திருச்சி, திருச்சி – கோலாலம்பூர் மார்கமாக சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram