தமிழகத்தில் இருந்து கோலாலம்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவுகள் மே மாதம் வரை திறக்கப்பட்டுள்ளன. (Ticket Booking May)
தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து பல விமானங்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட உள்ளது. (Ticket Booking May)
மலேசியா – சிங்கப்பூர் : எல்லைகள் மூடப்பட்டு ஓர் ஆண்டு நிறைவு.!
இந்த விமானங்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. மேலும் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாதங்களுக்கும் பயணம்செய்ய முன்பதிவு தொடங்கி உள்ளது.
மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 30ம் தேதி வரை திருச்சியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு இயக்கப்பட உள்ளது.
மார்ச் 28 முதல் அனைத்து புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மாலை 05.45 மணிக்கு திருச்சியில் இருந்து விமானங்கள் கோலாலம்பூர் புறப்படும்.
அதே போல 29 மார்ச் தொடங்கி மே 1ம் தேதி வரை அனைத்து திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மதியம் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானங்கள் புறப்படும்.
சென்னையில் இருந்து ஏப்ரல் 1 முதல் 29 வரை அனைத்து வியாழக்கிழமைகளில் காலை 10.50 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் கோலாலம்பூர் செல்லும்.
#FlyWithIX : India🔄 Kuala Lumpur
Summer Schedule 2️⃣0️⃣2️⃣1️⃣✈️
Bookings are open for flights till May 2021.
See you on-board 🤗✈️ pic.twitter.com/mqp0KmM32X
— Air India Express (@FlyWithIX) March 20, 2021
அதே போல ஏப்ரல் 1 முதல் 29 வரை அனைத்து வியாழக்கிழமைகளில் மாலை 06.45 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து விமானங்கள் சென்னை புறப்படும்.
இதற்கான பட்டியல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.
மலேசியாவை பொறுத்தவரை வந்தே பாரத் திட்டம் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
* Telegram