“மலேசியா to இந்தியா” – 109 பயணிகளுடன் பயணித்த சிறப்பு விமானம்.!

Vande Bharath Flights
Image tweeted by India in Malaysia

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மேலும் ஒரு சிறப்பு விமானம் இந்தியாவின் ஹைதராபாத் மற்றும் விஜயவாடா ஆகிய நகரங்களுக்கு இயக்கப்பட்டது. (Special Flight to India)

109 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இந்தியாவின் ஹைதராபாத் மற்றும் விஜயவாடா ஒரு சிறப்பு விமானம் இயக்கப்பட்டுள்ளது. (Special Flight to India)

“மலேசியா முதல் இந்தியா வரை” – தாயகம் திரும்பிய 300 பயணிகள்.!

கடந்த டிசம்பர் 2ம் தேதி மலேசிய முதல் இந்தியாவிற்கான முதல் வந்தே பாரத் விமானம் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று டிசம்பர் 4ம் தேதி 109 பயணிகளுடன் ஒரு சிறப்பு விமானம் கோலாலம்பூரில் இருந்து ஹைதராபாத் மற்றும் விஜயவாடா வந்துள்ளது.

ஆனால் இந்த வந்தே பாரத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் விமானங்களில் மூன்று மடங்கு வரை விமான கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இந்த இக்கட்டான சூழலில் வேலை இழந்து, உன்ன வழியின்றி தாயகம் நோக்கி திரும்ப ஆவலுடன் இருக்கும் மக்களுக்கு இது பெரும் இடியாக இருக்கின்றது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிற விமான சேவைகளை மலேசியாவிற்கு அளிக்காமல். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் பலர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். (Special Flight to India)

பிற விமான சேவைகளை வழங்க தொடங்கினாள் தங்கள் போக்குவரத்துக்கு பெருமளவு உதவியாக இருக்கும் என்று பயணிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

வழக்கத்திற்கு மாறாக மூன்று மடங்கு வரை கட்டணம் வந்தே பாரத் திட்டத்தில் வசூலிக்கப்படுவதாக மக்கள் வருத்தம் தெரிவிப்பதை நம்மால் பார்க்கமுடிகிறது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram