வந்தே பாரத் – “கோலாலம்பூர் to திருச்சி, 7 நாட்களில் 7 விமானங்கள்”

India KL Special Flight
Image tweeted by India in Malaysia

வந்தே பாரத் திட்டத்தின் டிசம்பர் மாத பட்டியலில் அனைத்து புதன்கிழமைகளிலும் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தமிழகத்தின் திருச்சிக்கு விமானம் இயக்கப்படுகிறது. (Malaysia to Trichy Flights)

டிசம்பர் 2020 2ம் தேதி தொடங்கி 30 வரை அனைத்து புதன்கிழமைகளிலும் கோலாலம்பூர் முதல் திருச்சிக்கு விமானம் இயக்கப்பட்டு வருகின்றது. (Malaysia to Trichy Flights)

“பி.கே.பி : 6 இந்தியர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலார்கள் தற்கொலை.!”

மேலும் கூடுதலாக டிசம்பர் மாதம் 28ம் தேதியும் ஒரு சிறப்பு விமானம் இயக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல டிசம்பர் 3ம் தேதி முதல் 17 வரை மூன்று வியாழக்கிழமைகளிலும் தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு விமானங்கள் கோலாலம்பூரில் இருந்து இயக்கப்படுகிறது.

மேலும் விமானங்கள் குறித்த பல தகவல்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொடர்ந்து வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பட்டியல், பயண இடம் மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து தவறான தகவல் பரவிவருகிறது.

மக்களை அதுபோன்ற போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும். அது போன்ற அறிவிப்புகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் பிற விமான சேவைகளை மலேசியாவிற்கு அளிக்காமல். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் பலர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram