மலேசியா – “தமிழ் பள்ளிகள் முன்னேற்றத்திற்கு இந்த நிதி போதாது”

Malaysia Tamil Schools
File Image

உலகம் எங்கும் பரவியுள்ள நாடுகளில் பல இடங்களில் தமிழர்களின் பங்கீடு என்பது அதிகம். இதற்கு மலேசியாவும் விதிவிலக்கு அல்ல. (Malaysia Tamil Schools)

மலேசியாவை பொறுத்தவரை தமிழர்களின் பாரம்பரியம் என்பது 200 ஆண்டுகள் கண்டது நிற்கும் ஒன்று. தோட்டத்தொழில் அவர்கள் பங்கு அதிகம். (Malaysia Tamil Schools)

“கட்டாய SWAB பரிசோதனை செய்யவேண்டும்” – மலேசிய விமான நிலையம்.!

இந்நிலையில் வரவிருக்கும் 2021ம் ஆண்டிற்கான பட்ஜெட், கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. பெரிக்காத்தான் நேஷனல் அரசின் தலைமையில் இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த பட்ஜெட் அறிவிப்பு குறித்து ஒரு முக்கிய கேள்வியை அப்போது முன்வைத்தார் பத்துகாஜா பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்.

திரு. சிவகுமார் அவர்கள் அப்போது வெளியிட்ட அறிக்கையில். அறிவிக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில் தமிழ் மற்றும் சீன பள்ளிகளுக்கான தனிப்பட்ட பட்ஜெட் அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்நிலையில் அந்த நிதி ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

சென்ற பட்ஜெட்டில் தமிழ் பள்ளிகளுக்கு என்று தனியாக 5 கோடி வெள்ளி, மித்ராவுக்கு 10 கோடி வெள்ளி மற்றும் தெக்குனுக்கு 2 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டதை அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அனால் இவ்வாண்டு அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் தமிழ் பள்ளிகளுக்கு 29.98 மில்லியன் அதாவது 3 கோடிக்கும் குறைவாகவே அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பலர் தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மலேசியாவில் உள்ள பிற பள்ளிகளை போல தமிழ் பள்ளிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram