“கட்டாய SWAB பரிசோதனை செய்யவேண்டும்” – மலேசிய விமான நிலையம்.!

Malaysia Airport
Image tweeted by Malaysia Airport

சபா பகுதியில் இருந்து மலேசியாவின் பிற பகுதிகளுக்கு செல்வோருக்கு புதிய விதி ஒன்று கடந்த நவம்பர் 25ம் தேதி முதல் விதிக்கப்பட்டுள்ளது. (Malaysia Airport)

இந்த விதி சபாவில் இருந்து பிறநாடுகள், மற்றும் மலேசியாவின் பிற பகுதிகளுக்கு செல்வோருக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. (Malaysia Airport)

மலேசியா – “100 பில்லியன் வெள்ளி நஷ்டத்தில் சுற்றுலாத்துறை.?”

மலேசிய விமான நிலைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பின்வரும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

“நவம்பர் 25 முதல், மலேசியாவின் பிற மாநிலங்களுக்கு புறப்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்னர் சபாவில் இருந்து திரும்பியவர்கள் கட்டாய COVID-19 SWAB சோதனை மேற்கொள்ள வேண்டும்.”

மேற்குறிய இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவில் அண்மைக்காலமாக மலேசியாவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக Sabah பகுதியில் தொற்றின் அளவு தினமும் அதிகரித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது. நேற்றும் நாட்டில் அதிகபட்சமாக சபாவில் 326 பேர் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயம் மலேசியாவில் கொரோனா தாக்கிய நாள் தொடங்கி முதல் முறையாக பாதிப்பை விட இரண்டு மடங்கு அதிகமான மக்கள் குணமடைந்துள்ளனர்.

நேற்று 2555 பேர் மலேசியாவில் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அதில் சபா பகுதியில் இருந்து மட்டும் 2126 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேசியா தற்போது கொரோனா பரவளில் மூன்றாம் அலையில் உள்ளதை நினைவுப்படுத்தி மக்களை SOP-க்களை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளது அரசு.

கடந்த 6 மாதத்திற்கும் மேலாக மலேசியாவில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் விதிக்கப்பட்ட பொது நடமாட்டக் கட்டுப்பட்டால் வணிகம், போக்குவரத்துக்கு போன்ற பல விஷங்களை நம்பியே வாழ்க்கையை நகர்த்தும் மக்களுக்கு அது பெரும் இடியாக உள்ளது என்றால் அது மிகையல்ல.

இதுவரை மலேசியாவில் 300 பேர் கொரோனா காரணமாக இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் நேற்று ஒரே நாளில் 6 பேர் இறந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Sabah பகுதியில் அதிக அளவு தொற்று உள்ளதை மனதில் கொண்டு அரசு உடனடியாக உதவ வேண்டும் என்று தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது சபா பகுதிக்கு உடனடி உதவி வேண்டும். அடுத்த ஆண்டு அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram