30-க்கும் மேற்பட்ட விருதுகள் – அசத்தும் தமிழ் பள்ளி மாணவர்கள்.!

Malaysia Tamil Schools
File Image

E-Thic எண்ணப்படும் ஆசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு மலேசிய தமிழ் பள்ளியை சார்ந்த மாணவர்கள் சாதனை படைத்துள்ளார். (Malaysia Tamil School)

சுமார் 30-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்று அவர்கள் அசத்தியுள்ளார். ஜோஹோர் பகுதியில் உள்ள லாபிஸ் தமிழ்ப்பள்ளியை சார்ந்த மாணவர்கள் தான் இந்த சாதனையை படைத்துள்ளனர். (Malaysia Tamil School)

“மூன்றாம் அலையில் இருந்து மீண்டு வரும் மலேஷியா” – அதிகரிக்கும் குணமடைவோர் எண்ணிக்கை.!

இதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் உள்ள தமிழ் பள்ளி மாணவர்கள் ஹெர்பல் முகக்கவசம் கண்டறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் பரவி வரும் இந்த கொரோனா என்ற அரக்கனுக்கு இதுவரை 300-க்கும் அதிகமானோரை பலிகொடுத்துள்ளது மலேசியா.

இந்நிலையில் விஞ்ஞானிகள் இந்த நோய்க்கான மருந்தினை கண்டறிய இரவு பகலாக போராடி வருகின்றனர்.

அதே சமயம் இந்த வருடத்தின் இறுதியில் இருந்து இந்த நோய்க்கான vaccine எனப்படும் தடுப்பூசி வழங்க வாய்ப்புகள் அதிகம் என்று WHO எனப்படும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க இந்த நோய் பரவாமலும் வராமலும் தடுக்க பல முன்னெச்சிரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அதில் ஒரு நடவடிக்கையாக முகக்கவசம் திகழ்கின்றது. ஆரம்ப நிலையில் முகக்கவசம் கட்டாயம் அணிய தேவை இல்லை என்று பல நாட்டு அரசுகள் கூறிவந்த நிலையில் தற்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எஸ்.ஜே.கே.டி லடாங் எபோர், சுபாங் ஜெயா, சிலாங்கூர் உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த 9 மாணவர்கள் தங்களுடைய அசாதாரண முயற்சியால்,

கோவிட் 19 நோயிலிருந்து பாதுகாக்கும் விதமாக ஹெர்பல் முகக்கவசத்தை கண்டுபிடித்து புதிய சாதனை படைத்துள்ளனர்.

இந்த தமிழ் மாணர்வகளின் படைப்பு தற்போது பலரின் பாராட்டை பெற்று வருகின்றது.

அதே சமயம் இந்த அறிய கண்டுபிடிப்பை நிதர்சனமாகிய மாணவர்களுக்கு UiTM என்று அழைக்கப்படும்.

Universiti Teknologi Mara என்ற நிறுவனம் நடத்தும் “மெய்நிகர் கண்டுபிடிப்பு மற்றும் வடிவமைப்பு – IIDEx – 2020 தங்கம் மற்றும் வைரம் ஆகிய விருதுகளை வழங்கி கௌரவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. (Malaysia Tamil School)

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram