“மூன்றாம் அலையில் இருந்து மீண்டு வரும் மலேஷியா” – அதிகரிக்கும் குணமடைவோர் எண்ணிக்கை.!

Corona Third Wave
Image tweeted by Noor Hisham Abdullah

மலேசியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை மிகவும் மோசமான முறையில் பரவி வருகின்றது. நேற்று ஒரே நாளில் 1123 பேருக்கு தொற்று பரவியுள்ளது. (Corona Third Wave)

கடந்த ஒரு மாத காலமாகவே 1000-க்கும் அதிக அளவிலேயே தொற்று எண்னிக்கை பதிவாகி வருகின்றது.  அதிலும் குறிப்பாக சபா பகுதியில் தான் தொற்றின் அளவு அதிகம் உள்ளது. (Corona Third Wave)

“மலேசியா to இந்தியா” – 109 பயணிகளுடன் பயணித்த சிறப்பு விமானம்.!

நேற்று உள்ளுரில் பாதிக்கப்பட்ட 1118 பேரில் 391 பேர் சபா பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று பகல் 12 மணி நிலவரப்படி புதிதாக உள்ளூரில் 1123 பேருக்கும் வெளிநாடுகளில் இருந்து மலேசியா திரும்பிய ஐந்து பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

மலேசியாவை பொறுத்தவரை இதுவரை கொரோனவால் பாதித்த மக்களை எண்ணிக்கை என்பது 71359 என்ற மிகப்பெரிய அளவை தொட்டுள்ளது.

இதுஒருபுற இருக்க கொரோனாவின் மூன்றாம் அலையில் உள்ள மலேசியாவில் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

நேற்று ஒரே நாளில் 1143 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 60204 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஆரம்ப நிலையில் மலேசியாவில் Sabah மற்றும் Kedah பகுதியில் தான் அதிக அளவில் தொற்று காணப்பட்டது. இந்நிலையில் கெடா பகுதியில் தற்போது தொற்றின் அளவு குறைந்துள்ளது.

சபா பகுதிக்கு அடுத்தபடியாக தலைநகர் கோலாலம்பூரில் 265 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மக்கள் SOP-க்களை முறையாக கடைபிடிப்பது மட்டுமே சிறந்த தீர்வாக இருக்கும் என்பது பலரின் கருத்து.

நேற்று மட்டும் மலேசியாவில் 4 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இதுவரை 380 பேர் கொரோனா காரணமாக மரணித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram