தற்போது உலக அளவில் மெல்ல மெல்ல உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கி உள்ளத்து. சில நாடுகள் குறிப்பிட்ட பிற நாடுகளுக்கு பன்னாட்டு விமான சேவையையும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மலேசியா உள்பட சீனா, வியட்நாம், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் தற்போது உள்நாட்டு சுற்றுலா மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 5 மாதகால போராட்டத்திற்கு பிறகு இந்த இதமான சூழல் நிலவினாலும் இன்னும் 90 சதவிகித உலக நாடுகள் முழு பூட்டுதலில் தான் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. இந்நிலையில் பல நாடுகளும் பிற நாடுகளில் உள்ள தங்கள் மக்களை தாயகம் அழைத்து வருகின்றது.
இதையும் படிங்க : “குடிநுழைவு மையத்தில் சிக்கியிருந்த 142 இந்தியர்கள்” – பத்திரமாக சென்னை திரும்பினார்..!
இந்திய அரசும் வந்தே பாரத் திட்டத்தை அறிமுகபடுத்தி பிற நாடுகளில் இருந்து தங்கள் நாட்டு மக்களை தாயகம் அழைத்து செல்கிறது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சிங்கப்பூரில் இருந்து தமிழக செல்லும் அடுத்த மாத விமானங்களின் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுள்ளது சிங்கப்பூரில் செயல்படும் இந்திய உயர் கமிஷன். விரைவில் மலேசியாவில் இருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமானங்களுக்கான பயண சீட்டுகள் கண்டிப்பாக விமான நிலையத்தில் வழங்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
2 special #VandeBharatMission flights @FlyWithIX
1985(to Vijayawada/Hyderabad) and IX 1625(to Trichy) safely repatriated 339 indian nationals back to their homeland ?? from Malaysia today. @MEAIndia @IndianDiplomacy @PIB_India pic.twitter.com/PICjSWa9E3— India in Malaysia (@hcikl) August 27, 2020
இந்நிலையில் மலேசியாவில் சுற்றுலா மற்றும் வியாபார ரீதியாக வந்த இந்தியர்கள் இந்தியாவின் திருச்சி, ஹைதராபாத், விஜயவாடா ஆகிய இடங்களுக்கு இரண்டு சிறப்பு விமானங்கள் 339 பயணிகளை கொண்டு சென்றது. மேலும் நாளையுடன் இந்த மாதத்திற்கான வந்தே பாரத் விமானங்கள் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/
?? Telegram – https://t.me/malaysiatms