கோலாலம்பூர் முதல் தமிழகம் செல்லும் வந்தே பாரத் சேவை இந்த மாதமும் நடந்து வருகின்றது. நேற்று 358 பயணிகளுடன் தமிழகத்தின் திருச்சி மற்றும் டெல்லிக்கு இரண்டு விமானங்கள் பிறந்தன. (KL to Trichy Flight)
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை மற்றும் திருச்சி ஆகிய இரு நகரங்களுக்கு மலேசியாவில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. (KL to Trichy Flight)
“கொரோனா தடுப்பூசியை என் மேல் சோதனை செய்யுங்கள்.!” – புங் மொக்தார் ராடின்.!
வந்தே பாரத், மக்களின் வேண்டுகோளை ஏற்று இந்த டிசம்பர் மாதம் தமிழகத்திற்கு அதிக அளவில் விமானங்களை இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் மாதம் 2ம் தேதி தொடங்கி, இம்மாதம் முழுவதும் அனைத்து புதன்கிழமைகளிலும் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமான சேவை அளிக்கப்படவுள்ளது.
2, 9, 16, 23, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 6 விமானங்கள் தமிழகத்தின் திருச்சிக்கு இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போல டிசம்பர் 3ம் தேதி முதல் 17 வரை மூன்று வியாழக்கிழமைகளிலும் தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு விமானங்கள் கோலாலம்பூரில் இருந்து இயக்கப்படுகிறது.
Home-bound !
358 Indian nationals take #VandeBharatMission flights @FlyWithIX 1121 and 1625 to Delhi and Trichy respectively today.@MEAIndia @IndianDiplomacy @PIB_India @pibchennai pic.twitter.com/JDfhe4sZCF— India in Malaysia (@hcikl) December 9, 2020
மேலும் விமானங்கள் குறித்த பல தகவல்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொடர்ந்து வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. (KL to Trichy Flight)
இந்நிலையில் நேற்று திருச்சி மற்றும் தலைநகர் டெல்லிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 358 பயணிகளுடன் 2 விமானங்கள் வந்திறங்கின.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
* Telegram