“அதிக கட்டணம் வசூலிக்கிறதா வந்தே பாரத்.?” : வருத்தம் தெரிவிக்கும் மலேசிய பயணிகள்

KL to India Flights
Image tweeted by India in Malaysia

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி மற்றும் தலைநகர் டெல்லியை நோக்கி நேற்று 328 பயணிகளுடன் பறந்துள்ளது ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானங்கள். (KL to India Flights)

மக்கள் தொகையில் உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ள நாடு தான் அண்டை நாடான இந்தியா. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமையும் அதுவே. (KL to India Flights)

“தலைநகரில் குறையும் தொற்று” – 50,000 கடந்த பாதிப்பு எண்ணிக்கை.!

உலகின் பிற நாடுகளை போல, பன்னாட்டு போக்குவரத்துக்கு பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா வந்தே பரத் என்ற சேவையை அளித்து வருகின்றது.

இந்த கொரோனா காலகட்டத்தில் பிற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கும் மக்களை கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றது வந்தே பாரத்.

ஏற்கனவே அடுத்த வருடம் மார்ச் மாதம் வரையிலான விமான பட்டியலை வெளியிட்டுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்.

ஆனால் பிற விமான சேவைகளை மலேசியாவிற்கு அளிக்காமல். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் பலர் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

பிற விமான சேவைகளை வழங்க தொடங்கினாள் தங்கள் போக்குவரத்துக்கு பெருமளவு உதவியாக இருக்கும் என்று பயணிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

வழக்கத்திற்கு மாறாக மூன்று மடங்கு வரை கட்டணம் வந்தே பாரத் திட்டத்தில் வசூலிக்கப்படுவதாக மக்கள் வருத்தம் தெரிவிப்பதை நம்மால் பார்க்கமுடிகிறது.

பஹ்ரைன், டோஹா, துபாய், மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்கு இந்த வந்தே பாரத் சேவை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. (KL to India Flights)

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram