நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மேலும் ஒரு சிறப்பு விமானம் தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு இயக்கப்பட்டுள்ளது. (KL to Chennai Special Flight)
170 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தமிழகதின் தலைநகர் சென்னைக்கு மேலும் ஒரு சிறப்பு விமானம் இயக்கப்பட்டுள்ளது. (KL to Chennai Special Flight)
மலேசியா – “தமிழ் பள்ளிகள் முன்னேற்றத்திற்கு இந்த நிதி போதாது”
கடந்த நவம்பர் 22ம் தேதியே இந்த மாதத்திற்கான மலேசிய – சென்னை விமான சேவை முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று நவம்பர் 27ம் தேதி 170 பயணிகளுடன் ஒரு சிறப்பு விமானம் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்துள்ளது.
@hcikl officials facilitated repatriation of 170 Indian nationals from Malaysia by #VandeBharatMission ✈ @FlyWithIX 1621 to Chennai on 27 November. @MEAIndia @IndianDiplomacy @pibchennai pic.twitter.com/9He64gI5DV
— India in Malaysia (@hcikl) November 28, 2020
ஆனால் இந்த வந்தே பாரத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் விமானங்களில் மூன்று மடங்கு வரை விமான கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இந்த இக்கட்டான சூழலில் வேலை இழந்து, உன்ன வழியின்றி தாயகம் நோக்கி திரும்ப ஆவலுடன் இருக்கும் மக்களுக்கு இது பெரும் இடியாக இருக்கின்றது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிற விமான சேவைகளை மலேசியாவிற்கு அளிக்காமல். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் பலர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
பிற விமான சேவைகளை வழங்க தொடங்கினாள் தங்கள் போக்குவரத்துக்கு பெருமளவு உதவியாக இருக்கும் என்று பயணிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
வழக்கத்திற்கு மாறாக மூன்று மடங்கு வரை கட்டணம் வந்தே பாரத் திட்டத்தில் வசூலிக்கப்படுவதாக மக்கள் வருத்தம் தெரிவிப்பதை நம்மால் பார்க்கமுடிகிறது.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
* Telegram