மலேசியாவில் குடிநுழைவு தடுப்புக்காவல் நிலையங்களில் உள்ள கைதிகளுக்கு கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. (Detention Camp Malaysia)
மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடிநுழைவு தடுப்பு காவல் நிலையங்களில் உள்ள 1200-க்கும் அதிகமான கைதிகளுக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. (Detention Camp Malaysia)
“வந்தே பாரத்” – விரைவில் வெளியாகும் ஜனவரி 2021-க்கான விமான பட்டியல்.!
இந்த தகவலை மலேசிய பாதுகாப்பு அமைச்சர் திரு. இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்துள்ளார். புக்கிட் ஜலீல் மையத்தில் மட்டும் 600-க்கும் மேற்பட்டோர்க்கு தொற்று உறுதியாகி உள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே மலேசியாவில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும் மலேஷியா அரசால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதத்தில் மட்டும் சுமார் 2000 வெளிநாட்டவர்கள் உரிய ஆவணம் இன்றி கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த மக்களும் அடங்குவர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் புக்கிட் ஜலில் மற்றும் செமெனியி தடுப்புக் காவல் நிலையம் போன்றவற்றில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் அவ்வாறு அவர்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் போதிய வசதிகள் இல்லாமல் ஒரே அறையில் பலர் தங்க வைக்கப்பட்டுள்ளதால் அந்த இடங்களில் நோய் தொற்று அபாயம் அதிகம் உள்ளதாக கருதப்படுகிறது.
இதுவரை புக்கிட் ஜலில் மையத்தில் சுமார் 600-க்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று உறுதியானதை அடுத்து அங்கு பதட்டம் சூழல் நிலவி வருகின்றது.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
* Telegram