“இந்தியா, பாகிஸ்தான் உள்பட 23 நாடுகள்” – அமலுக்கு வந்த மலேசியாவின் புதிய தடை..!

Malaysia Lock Down 2.0
Image tweeted by Muhyiddin yassin

அண்டை நாடான இந்தியா உலக அளவில் கொரோனா பரவல் உள்ள நாடுகளில் மூன்றாம் இடத்தில் இருந்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் உலகிலேயே அதிகபட்சமாக ஒரே நாளில் சுமார் 70,000-க்கும் அதிகமான மக்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்னனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அங்கு தொடர்ச்சிய தொற்றின் அளவு உயர்ந்துகொண்டே வருகின்றது.

இந்தியா, பிரேசில், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கடந்த 5 மாத காலமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் அங்கு தொற்றின் அளவு சற்றும் குறைந்தபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “செம்பனை தோட்டம்” : வெளிநாட்டு பணியாளர்களை நம்பி இருக்க வேண்டாம் – அமைச்சர் முகமத் கைருதீன்.!

இந்நிலையில் எதிர்வரும் குளிர்காலத்தை நினைவில் கொண்டு மலேஷியா அரசு ஒரு அதிரடி முடிவினை எடுத்துள்ளது.

இந்தியா, இந்தோனேஷியா மற்றும் பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளில் தொற்றின் அளவு அதிகரித்து வருவதை கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

List of 23 Countries

இதனால், செப்டம்பர் மாதம் 7ம் தேதி முதல் இந்திய, ரஷ்யா மற்றும் அமெரிக்கா உள்பட 23 நாட்டில் இருந்து வரும் மக்களை மலேசியா ஏற்காது என்றும் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளில் 1,50,000க்கும் அதிகமான கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. Long Term Pass, நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள், Malaysia My Second Home Pass, Spousal visa வைத்திருப்பவர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் என்று மேற்குறிய யாருக்கும் மலேசியாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram