திங்கள் to வெள்ளி : “தமிழகத்திலிருந்து, மலேசியாவிற்கு தினமும் விமான சேவை”.!

Additional Flights to KL
Image Tweeted by Air India Express

வரவிருக்கும் மார்ச் மாதம் 1ம் தேதி முதல் 26ம் தேதி வரை தமிழகத்தின் இரு பகுதிகளில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மலேசியா செல்லவுள்ளது. (Air India Express March)

மார்ச் 1ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை வாரத்திற்கு திங்கள் முதல் வெள்ளி வரை தொடர்ந்து 5 நாட்கள் இந்த சேவை வழங்கப்படவுள்ளது. (Air India Express March)

“மைசெஜாத்தெரா செயலி” – கொரோனா தடுப்பூசி பெற பதிவு செய்யலாம்.!

இந்த பயணங்களுக்கான விமான டிக்கெட் முன்பதிவையும் தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இருந்து மார்ச் 4ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை அனைத்து வியாழக்கிழமைகளில் காலை 9 மணிக்கு 9.30 மணிக்கு (இந்திய நேரம்) கோலாலம்பூருக்கு விமானங்கள் புறப்படும்.

அதே போல, மேற்குறிப்பிட்ட நாட்களில் கோலாலம்பூரில் இருந்து மாலை 05.25 மணிக்கு விமானங்கள் புறப்பட்டு சென்னை வந்தடையும்.

மேலும் திருச்சியில் இருந்து மார்ச் 1 முதல் 26 வரை அனைத்து திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 9.45 மணிக்கு கோலாலம்பூருக்கு சேவை அளிக்கப்படுகிறது.

அதே போல மேற்குறிப்பிட்ட நாட்களில் கோலாலம்பூரில் இருந்து மாலை 05.10 மணிக்கு விமானங்கள் திருச்சி புறப்படும்.

இதற்கான டிக்கெட்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவை இந்தியாவின் பிற பகுதிகளை விட தென்னிந்திய பகுதிகளில் அதிகம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram