குடிநுழைவு தடுப்புக்காவலில் இருந்த 79 இந்தியர்கள் – நேற்று இரவு திருச்சி திரும்பினார்..!

trichy flight
Image tweeted by India in Malaysia

கோவிட் 19 தொற்று பரவல் காரணமாக பல நாடுகளும் தங்களுடைய பன்னாட்டு விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளது. ஆயினும் கடந்த மார்ச் மாதம் வரை சொந்த நாட்டில் இருந்து பிற நாடுகளுக்கு சுற்றுலா மற்றும் வணிக ரீதியாக சென்று சிக்கியுள்ள மக்களை மீட்க எல்லா நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இலங்கை, வியட்நாம், நியூஸிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்துள்ள நிலையில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த நோயின் தாக்கம் வலுபெற்றே வருகிறது என்பது வேதனை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : வந்தே பாரத் : ஆகஸ்ட் 11 to 27 – கோலாலம்பூர் முதல் தமிழகம் வரை – வெளியான விமான விவரம்..!

இந்நிலையில் பிற நாடுகளில் உள்ள மக்களை வந்தே பாரத் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி தாயகம் அழைத்து வருகின்றது இந்திய அரசு. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் மலேசிய அரசின் உதவியுடன் அங்குள்ள இந்திய மக்களை இந்தியாவின் கொச்சி, டெல்லி, சென்னை, திருச்சி, கோவை மற்றும் பெங்களூரூ ஆகிய இடங்களுக்கு அழைத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த தஞ்சை தரணியை சேர்ந்த முகமத் ஆபீஷ் தனது நன்றியினை மலேசிய மற்றும் இந்திய அரசுக்கு தெரிவித்தார். மேலும் இந்த விமானத்தில் மலேசிய குடிநுழைவு மையத்தில் சிக்கி இருந்த 79 இந்தியர்களுக்கும் திருச்சி அனுப்பிவைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முதல் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி வரை திருச்சி மற்றும் சென்னை உள்பட இந்தியாவின் பிற பகுதிகளுக்கு கோலாலம்பூரில் இருந்து புறப்படும் விமான விபரங்களை கொடுத்துள்ள மலேசியாவில் செயல்படும் இந்திய உயர் கமிஷன்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms