கோவிட் 19 தொற்றால் உலகம் முடங்கி உள்ள நிலையில் பிறநாடுகளுக்கான பன்னாட்டு விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது உலகின் பல நாடுகள். இலங்கை, வியட்நாம், நியூஸிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்துள்ள நிலையில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த நோயின் தாக்கம் வலுபெற்றே வருகிறது என்பது வேதனை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
@hcikl is pleased to share the schedule of #VandeBharatMission flights from #KualaLumpur for the period 11-27 August 2020. Kindly visit @hcikl wesite on https://t.co/Z7Qll2uaJt for more details and regular updates. #WeAreInThisTogether #IndiaFightsCorona pic.twitter.com/k5LSFSxfKb
— India in Malaysia (@hcikl) August 11, 2020
இந்நிலையில் பிற நாடுகளில் உள்ள மக்களை வந்தே பாரத் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி தாயகம் அழைத்து வருகின்றது இந்திய அரசு. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் மலேசிய அரசின் உதவியுடன் அங்குள்ள இந்திய மக்களை இந்தியாவின் கொச்சி, டெல்லி, சென்னை, திருச்சி, கோவை மற்றும் பெங்களூரூ ஆகிய இடங்களுக்கு அழைத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே மலேசியாவில் செயல்படும் High கமிஷன் ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி முதல் 13ம் தேதி வரையிலான விமான பட்டியலை வெளியிட்ட நிலையில் தற்போது ஆகஸ்ட் 11ம் தேதி முதல் ஆகஸ்ட் 27ம் தேதி வரை கோலாலம்பூரில் இருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கு செல்லவிருக்கும் விமானங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த விமானத்தில் பயணிக்க விரும்பும் பயணிகளுக்கு முழு விவரத்தையும் தற்போது இந்திய High கமிஷன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/
?? Twitter – https://twitter.com/malaysiatms