மலேசியாவில் இதுவறை 3,95,006 பேருக்கு முதல் டோஸ் தடுப்பு மருந்தும் அதேபோல 4519 பேருக்கு இரண்டாம் டோஸ் தடுப்பு மருந்தும் வழங்கப்பட்டுள்ளது. (Vaccine Second Dose)
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சுகாதார அமைச்சர் ஆதம் பாபா அவர்கள். (Vaccine Second Dose)
தமிழ்நாடு – கோலாலம்பூர் : மே மாதம் வரை புக்கிங் தொடங்கியது.!
சிலாங்கூர் பகுதியில் தான் இதுவரை அதிக அளவில் கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸ் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல இரண்டாம் டோஸ் தடுப்புசியை சரவாக் பகுதி மக்களுக்கு தான் அதிகம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சரவாக் பகுதியில் 1487 பேருக்கும், கோலாலம்பூரில் 565 பேருக்கும், பேராக் பகுதியில் 475 பேருக்கும், சிலாங்கூர் பகுதியில் 369 பேருக்கும் போடப்பட்டுள்ளது. .
மேற்குறிய இந்த தகவலை பிரபல ஸ்டார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் கோலாலம்பூர் பகுதியில் 35751 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேலும் 3,99,525 பேர் எந்த எந்த நகரத்தை சேர்ந்தவர்கள் என்ற முழு தகவலை ஆதம் பாபா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Terkini : Jumlah pemberian dos vaksin (mengikut negeri) setakat 19 Mac 2021.
Dos pertama : 395,006
Dos kedua : 4,519
Total : 399,525#LindungDiriLindungSemua pic.twitter.com/Mife7n6Axf— Dr Adham Baba (@DrAdhamBaba) March 20, 2021
பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 5 லட்சம் முன்களப்பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படும்.
அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை, அதிக அளவில் ஆபத்தில் உள்ள 9 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்.
அதன் பிறகு மூன்றாம் மற்றும் இறுதிக்கட்டமாக 18 வயது நிரம்பிய 16 மில்லியன் மக்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை இந்த தடுப்பூசி வழங்கு பணி நடைபெறும்.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
* Telegram