கடந்த சில வாரங்களாகவே மலேசியாவில் கொரோனா புதிய உச்சம் தொட்டு வருகின்றது. நேற்று, இதுவரை இல்லாத அளவில் 2188 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். (Corona Virus Update)
நேற்றும் சிலாங்கூர் பகுதியில் தான் அதிக அளவில் தொற்று காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 1623 பேர் சிலாங்கூர் பகுதியில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். (Corona Virus Update)
“இந்திய வெங்காயத்தை விரும்பும் மலேசியர்கள்” – குறைந்து வரும் வரத்து.!
அதே போல சபா பகுதி தொற்று எண்ணைக்கையில் இரண்டாம் இடத்தில் உள்ளது. சபா பகுதியில் 200-க்கும் அதிகமான மக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் கோலாலம்பூர், பேராக் மற்றும் நெகேறி செம்பிலன் ஆகிய பகுதிகளை தவிர பிற இடங்களில் தொற்றின் அளவு குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் கொரோனா குறித்து தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது.
Kenyataan Akhbar KPK 24 November 2020 – Situasi Semasa Jangkitan Penyakit Coronavirus 2019 (COVID-19) di Malaysia https://t.co/U16Cn0tA4h
— Noor Hisham Abdullah (@DGHisham) November 24, 2020
இந்நிலையில் மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி) நேற்று 2188 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையை 58847 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்று மட்டும் 1673 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை மொத்தம் 44153 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (Corona Virus Update)
மேலும் இந்த நோயின் காரணமாக நேற்று 4 பேர் மலேசியாவில் இறந்துள்ள நிலையில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்னிக்கை 341ஆக உயர்ந்துள்ளது.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
* Telegram