‘SOP-க்களை மீறினால் கடும் தண்டனை’ – எச்சரிக்கை விடுத்த மலேசிய அரசு..!

Ismayil Sabri yakob
Photo Courtesy : malaysia.news.yahoo.com

மலேசியாவில், உள்ளூரில் கடந்த சில நாட்களாக கட்டுக்குள் இருந்து தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் நாட்டில் உள்ளூர் தொற்று இருந்த நிலையில் பலரும் நிம்மதி பெருமூச்சு அடைந்த நிலையில் தற்போது மீண்டும் உள்ளூரில் தின்னும் தொற்றின் அளவு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

நேற்று மலேசியாவில் (உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மாலேசியா திரும்பியவர்கள்) 21 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அண்மைக்காலமாக சரவாக் பகுதியில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் நேற்றும் சரவாக் பகுதியில் மட்டும் 8 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் விதிக்கப்பட்டிருக்கும் SOP-க்களை உணவகங்கள் மீறுவதாக புகார்கள் எழுந்து வருகின்றனர்.

மீட்சிக்கான கட்டுப்பாட்டில் மலேசியா இருந்து வரும் நிலையில் உணவாக உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் விதிக்கப்பட்டிருக்கும் SOP-க்களை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் டத்தோ இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/
?? Twitter      – https://twitter.com/malaysiatms