‘வீழ்ச்சியடையும் கொரோனா’ – மலேசியாவில் மேலும் இருவர் நலம் பெற்றனர்

corona

சீனாவில் அனுதினம் பல உயிர்களை பலிவாங்கி வருகின்றது கொரோனா நோய் தொற்று. இந்நிலையில் மலேசியாவில் 15க்கும் அதிகமானோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அண்மைக்காலமாக பலர் இந்த நோயில் இருந்து முழுமையாக மீண்டு வருகின்றனர். தற்போது மலேசியாவில் உள்ள Sungai Buloh என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் தற்போது முழுமையாக குணமடைந்து உள்ளதாக மலேசியா சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பரவி வரும் கொரோனா மலேசியாவில் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இருப்பினும் மக்கள் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அதே சமயம் மக்கள் யாரும் இந்த நோய் குறித்து அச்சப்பட வேண்டாம் என்றும் சுகாதார துறை அமைச்சர் தெரிவித்தார். இந்த நேரத்தில் நாட்டிற்காகவும் பாதிக்கப்பட்ட மக்களை காப்பதற்காகவும் கடுமையாக உழைக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் தனது நன்றியையும் அவர் தெரிவித்தார்.

சீனாவில் பரவி வரும் இந்த நோய்க்கு, அந்த நோயில் இருந்து குணமடைந்த பலர் தங்களது பிளாஸ்மாவை அளித்து நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருவது அந்த நாட்டு மக்களின் ஒற்றுமையை காட்டுகின்றது.