மலேசியா : நேற்று ஒரே நாளில் 83 பேர், இதுவறை 4567 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்

noor hisham abdullah

மலேசியாவில் கடந்த சில வாரங்களாக 40க்கும் குறைவான அளவில் புதிய பாதிப்புகள் தோன்றிய நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் 100-க்கும் அதிகமான புதிய பாதிப்புகள் ஏற்பட்டது பலரை கவலையில் ஆழ்த்தியது. இந்நிலையில் தற்போது மீண்டும் புதிய பாதிப்புகள் குறைத்தும், குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகின்றது.

இந்நிலையில் மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் நேற்று மட்டும் 30 பேர் (இதுவரை பதிவான குறைவான அளவில் ஒன்று) புதிதாக கொரோனாவால் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இது பாதிப்பு எண்ணிக்கையை 6383 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று மட்டும் 83 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 4567 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 71.5 சதவிகிதமாக ஆக உயர்த்தி உள்ளது.

மேலும் நேற்று ஒருவர் கொரோனாவிற்கு மலேசியாவில் இறந்துள்ள நிலையில், மலேசியாவில் கொரோனா பாதித்து இறந்தவர்களின் எண்னிக்கை 106ஆக உயர்ந்துள்ளது.