மலேசியாவில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்படும் மக்களின் அளவு குறைந்துள்ளன மலேசியா சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இயக்குனர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறியுள்ளார். இதுவரை மலேசியாவில் பதிவான பாதிப்பு அளவில் மிகவும் குறைவாக நேற்று ஏப்ரல் 15ம் தேதி 85 பேர் கொரோனா காரணமாக புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதே போல ‘மலேசியா இன்று’ என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் நேற்று இயக்குனர் ஜெனரல் வெளியிட்ட அறிக்கையில் அடிப்படியில் நேற்று 169 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 2647 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும், இந்த செய்தி மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும் இயக்குனர் ஜெனரல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுவரை மலேசியாவில் 5072 பேர் கொரோனா காரணமாக பாதித்து உள்ளதாகவும், மேலும் இந்த நோய் காரணமாக 82 பேர் மலேசியாவில் இறந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் உலக அளவில் கொரோனாவை கையாளும் சிறந்த மருத்துவர்களின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது சீனாவை சேர்ந்த செய்தி நிறுவனம். அந்த பட்டியலில் மலேசியாவின் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மூன்றாம் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.