கொரோனா நோய் தொற்று பயம் ஒருபுறம் இருந்தாலும் கடந்த சில நாட்களாகவே தைப்பூச திருவிழா கொண்டாட்டங்கள் மலேசியாவில் வெகு விமர்சையாக நடந்து வருகின்றன. தைப்பூச திருவிழா மலேசியாவில் உள்ள ஹிந்துக்கள் மட்டும் இல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரம் லட்ச கணக்கான பக்தர்களால் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு.
சென்ற ஆண்டை விட இந்த தைப்பூச திருவிழாவிற்கு லட்ச கணக்கில் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை போலவே இந்த ஆண்டும் பல லட்சம் பக்தர்கள் தற்போது இந்த விழாவில் பங்கேற்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
பரவி வரும் கொரோனா நோய் தொற்று நாட்டை உலுக்கி வரும் நிலையில், இந்த திருவிழாவை மலேசியா அரசு மிகவும் கவனத்துடன் நடத்தி வருகின்றது, மக்கள் தங்களது சுகாதாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளது. பாதங்களுக்கு கையுறை முகமூடி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. அரசு மட்டும் இன்றி இந்த பணியில் பல தன்னார்வலர்கள் களமிறங்கி வேலை செய்கின்றனர்.