“புதிய உச்சத்தில் கொரோனா தொற்று” – Sabah பகுதியில் 702 பேர் பாதிப்பு..!

Malaysia Covid 19
Image tweeted by KKMalaysia

இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் (Covid 19 Malaysia) மலேசியாவில் உள்ளூர் தொற்று 866 என்ற அளவை எட்டியுள்ளது. சபா (Sabah) பகுதியில் மட்டும் 702 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மலேசியா தற்போது கொரோனா பரவளில் மூன்றாம் அலையில் உள்ளதை நினைவுப்படுத்தி மக்களை SOP-க்களை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தியது அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு வாரங்களாக மலேசியாவில் குறிப்பாக Sabah பகுதியில் தொடர்ந்து தொற்றின் அளவு உச்சத்தில் உள்ளது.

இதையும் படிங்க : “கோலாலம்பூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு” – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்..!

கடந்த 6 மாதத்திற்கும் மேலாக (Covid 19 Malaysia) மலேசியாவில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் விதிக்கப்பட்ட பொது நடமாட்டக் கட்டுப்பட்டால் வணிகம், போக்குவரத்துக்கு போன்ற பல விஷங்களை நம்பியே வாழ்க்கையை நகர்த்தும் மக்களுக்கு அது பெரும் இடியாக உள்ளது என்றால் அது மிகையல்ல.

இதுவரை மலேசியாவில் 187 பேர் கொரோனா காரணமாக இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் நேற்று ஒரே நாளில் 7 பேர் இறந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால் கடந்த சில நாட்களாக வெளியாகும் செய்திகள் பல மாத கடின உழைப்பை சீர்குலைக்கும் வண்ணம் உள்ளது என்பது வேதனை அளிப்பதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Sabah பகுதியில் தான் அண்மைக்காலமாக தொற்றின் அளவு உயர்ந்து வருகின்றது. இந்த இக்கட்டான சூழலில் ஆறுதல் அளிக்கும் விதமாக நேற்று ஒரு நிகழ்வு நடந்தேறியது. இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 701 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram