‘தாயகம் திரும்ப இந்திய அரசு உதவ வேண்டும்..!!’ – மலேசியாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்..!!

Indians in malaysia

அண்மைக்காலமாக அண்டை நாடான இந்தியா பிற நாடுகளில் சிக்கி தவிக்கும் தங்களுடைய நாட்டு பிரஜைகளை தாயகத்திற்கு திரும்ப அழைத்து வருகின்றது. இந்நிலையில் தற்போது மலேசியாவில் சிக்கியுள்ள சுமார் 500 இந்திய பிரஜைகள் தங்களை தாயகம் அழைத்துச்செல்ல வழிவகுக்குமாறு இந்திய அரசை கேட்டுகொண்டள்ளனர்.

இந்நிலையில் இந்திய அரசு ஏற்கனவே மலேசியாவில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்துச்செல்ல ஏர் இந்தியா விமானத்தை செயல்பாட்டில் வைத்துள்ளது. ஆனால் அதில் பயணிக்க சுமார் 1000 வெள்ளிக்கும் அதிகமாக பணம் வசூலிக்கப்படுகிறது என்றும். ஏற்கனவே மலேசியாவில் வேலை இழந்து வாடும் தங்களால் அந்த அளவு பெரிய தொகையை தர இயலாது என்றும் அங்கு சிக்கியுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே தங்குவதற்கு இடமும், உன்ன உணவும் இன்றி தவிக்கும் தங்களுக்கு உதவுமாறு அவர்கள் இந்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளதாக வணக்கம் மலேசியா என்ற பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.