COVID – 19 – மலேசியாவில் தொடர்ந்து உயரும் குணமடைபவர்கள் எண்ணிக்கை – சுகாதார அமைச்சகம்

noor hisham abdullah

கடந்த மூன்று மாதங்களாக கொரோனா நோய் தொற்று மலேசியாவை அச்சுறுத்தி வருகின்றது. இந்நிலையில் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக கடந்த இரண்டு வாரங்களாக மலேசியாவில் கொரோனவால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது.

தினமும் அன்றைய நாளில் ஏற்படும் பாதிப்பு பற்றி மலேசியா சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இயக்குனர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா அறிக்கை வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் நேற்று ஏப்ரல் 18ம் தேதி வெளியான அறிக்கையின்படி மலேசியாவில் சுமார் 54 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இது கடந்த இரண்டு மாதத்தில் பதிவான அளவில் மிகவும் குறைவான அளவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல ‘மலேசியா இன்று’ என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் நேற்று மட்டும் சுமார் 135 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3102 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் தெரிவித்துள்ளது. அதே சமயம் இதுவரை கொரோனாவால் மலேசியாவில் 5305 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாவும் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் இதுவரை மலேசியாவில் 87 பேர் இந்த நோயின் காரணமாக இறந்துள்ளதாகவும், தற்போது நிலவும் கட்டுப்பாட்டை தொடர்ந்து கடைபிடித்தால் நல்ல பல கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.