மலேசியாவில் கொரோனா குறித்து தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி) நேற்று மட்டும் 47 பேர் புதிதாக கொரோனாவால் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இது பாதிப்பு எண்ணிக்கையை 6941 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள 6000-க்கும் அதிகமான மக்களில் 300க்கும் அதிகமான 12 வயதிற்கு உற்பட்ட சிறுவர்களும் அடங்குவார்கள் என்று சுகாதார அமைச்சக இயக்குனர் ஜெனரல் கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ள 300-க்கும் குழந்தைகளில் 45 சதவிகிதத்திற்கு அதிகமாக 6 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஆனால் அவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகள் அனைவரும் சிறந்த பாதுகாப்பில் இருப்பதாகவும், தினமும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என்று அவர் தெரிவித்தார்.