COVID – 19 : மலேசியாவில் கொரோனா பாதித்த 1300-க்கும் அதிகமானோர் பூரண குணம்

corona cure

பரவி வரும் கொரோனா காரணமாக தற்போது மலேசிய நிர்வாக தலைநகரான புத்ராஜெயாவை சிவப்பு மண்டலமாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த நோய் தொற்று தொடங்கிய நாள் முதல் WHO எனப்படும் உலக சுகாதார மையம் மற்றும் worldometers.info என்ற இணையதளம் ஒன்றும் உலக அளவில் கொரோனா குறித்த அறிக்கை வெளியிட்டு வருகின்றது.

இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இதுவரை இந்த நோயின் காரணமாக உலக அளவில் சுமார் 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். இந்த நோய் தாக்கி இதுவரை உலக அளவில் சுமார் 70,000-க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சுமார் 3,08,621 பேர் இந்த கொரோனா நோயில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் மலேசியாவில் இதுவரை சுமார் 3500-க்கும் அதிகமானோர் இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதே சமயம் இந்த நோயின் காரணமாக மலேசியாவில் 60-க்கும் அதிகமானோர் பரிதாபகரமாக இறந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது ஒருபுறம் இருக்க மலேசியாவில் சுமார் 1300-க்கும் அதிகமானோர் இந்த நோயில் இருந்து குணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த இக்கட்டான சூழலில் வாடிவரும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு சுகாதார அமைச்சகத்தின் தலைவர் நூர் ஹிஷாம் தனது ஆறுதலை தெரிவித்துள்ளார்.