மலேசியா : பச்சை மண்டலங்களில் உள்ள 84 இந்து கோவில்கள் திறக்க அனுமதி..!!

கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி தொடங்கியது கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட இயக்க கட்டுப்பட்டு. மலேசியாவில் பெருமளவில் தொற்று பரவலை தடுக்க இது மிகவும் உறுதுணையாக இருந்தது என்று பல அறிஞர்கள் கூறிவருகின்றனர். ஆயினும் தற்போது வரை இந்த நோயின் தாக்கத்தால் -க்கும் அதிகமானோர் இறந்துள்ளார். அதே சமயம் இதுவரை 7000-க்கும் அதிகமானமக்கள் இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த மே மாத தொடக்கத்தில் நிலவி வந்த இயக்கக் கட்டுப்பாட்டில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் மலேசியாவில் உள்ள 80-க்கும் அதிகமான தொற்று முற்றிலும் இல்லாத பச்சை மண்டலங்களில் உள்ள இந்து கோயில்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திறக்க அனுமதி அளித்த கோவில்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் ஆர்.எஸ். மோகன் தெரிவித்துள்ளார்.

Opening Hindu Temple

மேலும் ஜூன் 10ம் தேதி முதல் கோவில்கள் திறக்கப்படும் என்றும், பக்தர்கள் வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில் மாலை 6 மணி முதல் 9 மணி வரை கோவிலுக்கு செல்லலாம் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.