மிரட்டும் கொரோனா – மலேசியாவில் தொடர்ந்து உயரும் பாதிப்பு எண்ணிக்கை

malaysia corona

கடந்த சில நாட்களாகவே மலேசியாவில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருகின்றது. ஆரம்பத்தில் வெகு குறைவான அளவில் மக்கள் இந்த நோயின் காரணமாக பாதிக்கப்படிருந்த  நிலையல் தற்போது கொரோனா நோயினால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை 450ஐ தாண்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.

இந்த கொரோனா வைரஸ் பரவலால் சுமார் 125 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு இருப்தாக மலேசியாவின் சுகதரத்துரை அமைச்சர் டாக்டர் ஆடம் பாபா ஒரு தகவகளை தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தற்போது சுமார் 12 நோயாளிகள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாகவே பாதிக்கப்பட்டோரின் அளவும் அதே சமயம், தீவிர சிகிச்சை பெற்றுவருவோரின் அளவும் அதிகரித்து கொண்டே வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பல கட்டுபாடுகளை மலேசிய அரசு விதித்திருந்த நிலையில் தற்போது ,மலேசியர்கள் வெளிநாடு செல்ல தடை விதித்துள்ளது. அதேபோல வெளிநாட்டில் இருந்து மக்கள் மலேசியா வரவும் தடை விதிக்கபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.