COVID – 19 : மலேசியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை – அப்டேட்

malaysia corona

பார் முழுதும் பரவி வரும் கொரோனா காரணமாக உலகின் வல்லரசு நாடான அமேரிக்காவில் இதுவரை 40,000-க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த நோய் தொற்று தொடங்கிய நாள் முதல் WHO எனப்படும் உலக சுகாதார மையம் மற்றும் worldometers.info என்ற இணையதளம் ஒன்றும் உலக அளவில் கொரோனா குறித்த அறிக்கை வெளியிட்டு வருகின்றது.

இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இதுவரை இந்த நோயின் காரணமாக உலக அளவில் சுமார் 24 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். இந்த நோய் தாக்கி இதுவரை உலக அளவில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சுமார் 6,29,390 பேர் இந்த கொரோனா நோயில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே போல மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக தினமும் வெளியிட்டு வருகிறார் மலேசிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இயக்குனர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா. ‘மலேசியா இன்று’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி நேற்று ஏப்ரல் 19ம் தேதி மலேசியாவில் புதிதாக 84 பேர் புதிதாக இந்த நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது பாதிப்பு எண்ணிக்கையை 5389ஆக உயர்த்தி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மலேசியாவில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் இறப்பு எண்னிக்கை 89ஆக உயர்ந்துள்ளது.

அதே போல நேற்று 95 பேர் குணமடைந்து, அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும். இதனால் குணமடைந்தவர்கள் சதவிகிதம் 59.3ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3197.