அதிகரிக்கும் பாதிப்பு – மலேசியாவில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று

malaysia corona

உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி வரும் கொரோனா நோய் தொற்றுக்கு இதுவரை சுமார் 4500க்கும் அதிகமானோர் பலியாகி உள்ள நிலையில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இரண்டு பேர் இந்த நோயின் காரணமாக இறந்துள்ள நிலையில் தற்போது மலேசியாவில் சுமார் 39 பேர் புதிதாக இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மலேஷியா இன்று செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மலேசியாவின் சுகாதார இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி இந்த மார்ச் மாதம் 1ம் தேதி வரை ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடைபெற்ற ஒரு பேரணியில் தான் இந்த புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். அந்த நிகழ்வில் பங்கேற்ற சுமார் 14,500 பேரில் 30-க்கும் அதிகமானோர் இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போது பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.