விமான பயணங்களின்போது பயன்பாட்டாளர்களுக்கு பெரிய தலைவலியாக பார்க்கப்படுவது அவர்கள் கொண்டுவரும் பேக்கேஜ்கள் என்றால் அது மிகையல்ல. இந்த பேக்கேஜ்களை பொறுத்தவரை ஒவ்வொரு விமான சேவை நிறுவனமும் அதற்கென்று தனி வழிமுறைகளை வைத்துள்ளது. இந்நிலையில் பிரபல ஏர் ஆசியா நிறுவனம் அண்மையில் இந்த பேக்கேஜ் குறித்த ஒரு சிறப்பான தகவலை தனது ட்விட்டர் தளத்தின் மூலம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 4 முதல் டிசம்பர் 31ம் தேதி வரை மலேசியாவில் உள்ளூர் சேவையை பயன்படுத்துவோருக்கு அதிரடி சலுகை ஒன்றை அறிவித்தது ஏர் ஆசியா நிறுவனம். சுமார் 50 சதவிகிதம் வரை கட்டண குறைப்பை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் தற்போது இந்த நிறுவனம் கூடுதலாக சலுகை ஒன்றை அறிவித்துள்ளது அதன்படி, கோலாலம்பூர், கோட்டா கினபாலு, ஜோஹர் மற்றும் பினாங் பகுதியில் இருந்து குறிப்பிட்ட இடங்களுக்கு பயணம் செய்வோருக்கு எல்லா விமானங்களில் எல்லா இருக்கைகளுக்கு 20 சதவிகிதம் கட்டண குறைப்பை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
Everyone can fly now! Enjoy 20% off all seats all flights at https://t.co/6E2SxPfV8P.
Book now till 9 Aug 2020.
Travel from 17 Aug – 6 Dec 2020.
T&C apply. Read more at https://t.co/nxdTnTMpWI pic.twitter.com/EnODIvEWWY— AirAsia (@AirAsia) August 3, 2020
இந்த சலுகை 17 ஆகஸ்ட் முதல் 6 டிசம்பர் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இதற்கான முன்பதிவுகளை வரும் ஆகஸ்ட் 9ம் தேதிக்குள் செய்துகொள்ளலாம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது உலக அளவில் நிலவும் இக்கட்டான சூழலால் மக்கள் பெரிதும் விமான போக்குவரத்தை பயன்படுத்தாத நிலையில் அதை ஊக்குவிக்க இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கட்டண குறைப்பு குறித்த முழுத்தகவலையும் தங்களுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/
?? Twitter – https://twitter.com/malaysiatms