தற்போது உலகம் முழுதும் கொரோனா நோயின் காரணமாக ஒரு அசாதாரண சூழல் நிலவி வருகின்றது. மலேசியாவின் அண்டை நாடான இந்தியாவிலும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கொரோனா நோயின் காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே போல கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் அந்நாட்டின் தலைநகர் டெல்லியில் நடந்த ஒரு மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது அப்போது உறுதியானது.
Syukur pada Allah SWT yang memakbulkan doa #JemaahTabligh kita semalam agar dipermudahkan urusan penerbangan dan diizinkan selamat sampai di tanah air pagi ini selepas terkandas di ?? India pic.twitter.com/3HJFbRpekd
— Hishammuddin Hussein (@HishammuddinH2O) July 18, 2020
இந்நிலையில் இந்த அசாதாரண சூழல் காரணமாக இந்தியாவில் சிக்கித்தவித்த 96 மலேசியர்களை மீட்க மலேசிய அரசு பல நாட்களாக நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. தற்போது கடந்த வெள்ளியன்று இந்திய அரசின் உதவியோடு மலேசியர்கள் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது.
Seramai 96 rakyat Malaysia yang terkandas di #NewDelhi akibat pandemik #COVID19 berjaya dibawa pulang, hari ini.
Pesawat #MalindoAir yg membawa 105 penumpang termasuk 9 anak kapal mendarat di KLIA jam 6.31 pagi tadi.
Daripada 96 orang itu, 62 adalah jemaah tabligh dan 34 pic.twitter.com/WMuSkDaGJv
— KKMPutrajaya (@KKMPutrajaya) July 18, 2020
இதன் விளைவாக 96 பயணிகள் மட்டும் சில பணியாளர்களுடன் மலிண்டோ ஏர் விமானம் மூலம் அவர் தாயகம் அழைத்து வரப்பட்டனர். தற்போது அவர்கள் அரசு உத்தரவுப்படி 14 நாட்கள் கட்டாய தனிப்படுத்துதலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.