COVID – 19 : மலேசியாவில் கொரோனா பாதித்த 38 சதவிகித மக்கள் பூரண குணம் – நூர் ஹிஷாம் அப்துல்லா

noor hisham abdullah

மலேசியாவில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்படும் மக்களின் அளவு குறைந்துள்ளன மலேசியா சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இயக்குனர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறியுள்ளார். நேற்று ஏப்ரல் 9ம் தேதி வெளியான அறிக்கையின்படி மலேசியாவில் சுமார் 109 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இது கடந்த இரண்டு வாரங்களை ஒப்பிடும்போதும் மிக குறைவான அளவிலான பாதிப்பு என்று கூறினார்.

அதே போல ‘சேனல் நியூ ஆசியா’ என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் நேற்று மட்டும் சுமார் 121 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 1608 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் இயக்குனர் ஜெனரல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. சதவிகித அடிப்படையில் பார்க்கும்போது இதுவரை நோய் பாதித்த 38 சதவிகித மக்கள் தற்போது நலம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இதுவரை மலேசியாவில் 67 பேர் இந்த நோயின் காரணமாக இறந்துள்ளதாகவும், அதே சமயம் 47 பேர் செயற்கை சுவாசம் பெரும் நிலையில் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார். மக்கள் விதிக்கப்பட்டிருக்கும் இந்த பொது நடமாட்க் கட்டுப்பாட்டை சிறந்த முறையில் கடைபிடிக்கவும் அவர் வலியுறுத்தினார்.