கொரோனா : நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறும் சில மக்கள் : மலேஷியா ஆயுதப்படை

malaysia police

உலகம் முழுதும் 12000-கும் அதிகமான உயிரை பலிவாங்கியுள்ள இந்த கொரோனா நோய் தொற்றால் மலேசியாவில் கடந்த சில நாட்களாகவே நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக இந்த கொரோனா நோய் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் மக்கள் அனைவரும் தேவையின்றி வெளியில் வராமல் பொது இடங்களில் கூட்டமாக சேர்வதை தவிர்ப்பதன் மூலமே இந்த நோய் பரவளின் அளவை தடுக்க முடியும் என்று அரசு அடிக்கடி அறிவுறுத்தி வருகின்றது.

இதற்காக விதிக்கப்பட்டது தான் இந்த நடமாட்ட தடை, ஆனால் அரசு விதித்த இந்த தடையை 3.12 கோடி மக்கள் தொகை உள்ள மலேசியாவில் சுமார் 30 லட்சம் மக்கள் பின்பற்ற மறுப்பதாக மலேஷியா ஆயுதப்படை தெரிவித்துள்ளது. தற்போது நிலவி வரும் இந்த அசாதாரண சூழ்நிலையில் இந்த 30 லட்சம் மக்கள் என்ற எண்ணிக்கை மிகவும் அதிகம் என்றும் மக்கள் நடந்து கொண்டிருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையை முழுமையாக புரிந்து கொண்டு அரசோடு ஒத்துழைக்குமாறும் ஆயுதப்படை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் நிலவும் சூழலை சமாளிக்க மக்கள் உதவ வேண்டும் என்றும், இந்த நடமாட்டக் கட்டுப்பாடு பணியில் மலேசியா காவல்துறைக்கு உதவ சுமார் 7,500 ஆயுதப்படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்ற தகவலையும் அந்த அறிகையில் தெரிவித்துள்ளனர்.