மலேசியாவில் கொரோனா குறித்து தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி) இன்று மட்டும் 187 பேர் புதிதாக கொரோனாவால் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இது பாதிப்பு எண்ணிக்கையை 7604 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று மட்டும் 62 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 6041 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இன்று நல்வாய்ப்பாக மலேசியாவில் யாரும் கொரோனாவிற்கு பலியாகாத நிலையில் இறந்தவர்களின் எண்னிக்கை 115ஆக உள்ளது.
Drp 187 kes baru, 10 kes adalah kes import jangkitan luar negara. 177 adalah kes penularan tempatan & 173 kes adalah warga asing di mana 155 kes dikesan di Depot Tahanan Imigresen Bukit Jalil & 13 kes kluster Pengawal Keselamatan Cheras.
Warganegara Malaysia adalah 4 kes sahaja pic.twitter.com/oZIFac3p3q
— Noor Hisham Abdullah (@DGHisham) May 26, 2020
குறிப்பு : பாதிக்கப்பட்ட 187 பேரில், 173 பேர் வெளிநாட்டினர். அவர்களில் 155 பேர் புக்கிட் ஜலீல் குடிவரவு தடுப்புக்காவல் பகுதியில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.