உலக அளவில் பரவி வரும் இந்த உயிர்கொல்லி வைரஸை தடுக்க மலேசிய அரசு பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. அதே சமயம் அதில் வெற்றியும் பெற்று வருகின்றது. ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் முகக்கவசத்தையும் கட்டாயமாகியது. இந்நிலையில் கடந்த ஜூலை 13ம் தேதி தமிழகத்தில் உள்ள சிவகங்கையில் இருந்து மலேசியா திரும்பியவர் (நிரந்தர குடியுரிமை பெற்றவர்) நோய் தொற்று இல்லாததால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்.
ஹோட்டல் உரிமையாளரான இவர் தனிமைப்படுத்துதல் காலத்தில் தடையை மீறி வெளியில் சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு தொற்று உறுதியான நிலையில் கெடா பகுதியில் அவர் மூலமாக அப்போது மேலும் நால்வருக்கு தொற்று உறுதியானது.
இந்நிலையில் அவரது கடைக்கு கடந்த ஜூலை 13 முதல் 27ம் தேதி வரை சென்றவர்கள் அவர்களாக முன்வந்து அருகில் உள்ள சுகாதார மையத்தில் கோவிட் 19 பரிசோதனையை செய்துகொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் இருவருக்கு தொற்று உறுதியான நிலையில் மேலும் ஒருவருக்கு தொற்று என்று கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலருக்கு தொற்று உறுதியாகி வருகின்றது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் நாளுக்கு நாள் தொற்றின் அளவு அதிகரித்து கொண்டே வந்தது. இதுவரை 45 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். அண்மையில் அந்த நபருக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை வழங்கிய நிலையில் தமிழகத்திலும் அவருடைய குடும்பத்தினர் கொரோனா சோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறையின் துணை இயக்குநர் யசோதா பிரபல BBC நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
ஜூலை 13ம் தேதி அவர் மலேசியா சென்ற நிலையில் கொரோனா இருப்பது உறுதியானதால், தமிழகத்தில் சிவகங்கையில் உள்ள அவரது உறவினர்கள் சிலரும் தற்போது கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/
?? Twitter – https://twitter.com/malaysiatms