COVID – 19 : ‘புக்கிட் ஜலீல் குடிநுழைவு மய்யம்..!!’ – ‘நேற்று ஒரே நாளில் 270 வெளிநாட்டவருக்கு நோய் தொற்று..?’

Detention Camp Malaysia
File Picture

கடந்த சில வாரங்களாக மலேசியாவில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும் மலேஷியா அரசால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் சுமார் 2000 வெளிநாட்டவர்கள் உரிய ஆவணம் இன்றி கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த மக்களும் அடங்குவர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் தற்போது புக்கிட் ஜலில் மற்றும் செமெனியி தடுப்புக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் அவ்வாறு அவர்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் போதிய வசதிகள் இல்லாமல் ஒரே அறையில் பலர் தங்க வைக்கப்பட்டுள்ளதால் அந்த இடங்களில் நோய் தொற்று அபாயம் அதிகம் உள்ளதாக கருதப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு புக்கிட் ஜலில் மையத்தில் உள்ள 155 பேருக்கு நோய் தொற்று உறுதியானதை அடுத்து அங்கு பதட்டம் சூழல் நிலவி வருகின்றது.

இந்நிலையில் நேற்று அதே புக்கிட் ஜலில் மையத்தில் உள்ள 270 வெளிநாட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அங்கு பதட்டமான சூழல் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று மலேசியர்கள் நால்வர் உள்பட 277 பேருக்கு நோய் தொற்று உறுதி ஆனது குறிப்பிடத்தக்கது.