மலேசியாவில் கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் வந்த தொற்றுகள் நேற்று மீண்டும் 10 என்ற இலக்கை தொட்டது மக்களிடையே சற்று பீதியை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவில் கொரோனா குறித்து தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி) நேற்று மட்டும் 10 பேர் புதிதாக கொரோனாவால் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நேற்று மட்டும் 15 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 8461 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97.7 சதவிகிதமாக ஆக உள்ளது.
ஆனால் நேற்று தொற்று பாதித்த 10 பேரில் 7 பேர் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தொற்றின் அளவை முற்றிலும் ஒழிக்க அரசு போராடி வருகின்றது.