வந்தே பாரத் : அடுத்த கட்டத்தின் இரண்டாம் விமானம் – 174 பயணிகளுடன் சென்னை வந்த ஏர் இந்தியா..!

Chennai Flight
Image tweeted by India in Malaysia

கோவிட் 19 தொற்று பரவல் காரணமாக பல நாடுகளும் தங்களுடைய பன்னாட்டு விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளது. ஆயினும் கடந்த மார்ச் மாதம் வரை சொந்த நாட்டில் இருந்து பிற நாடுகளுக்கு சுற்றுலா மற்றும் வணிக ரீதியாக சென்று சிக்கியுள்ள மக்களை மீட்க எல்லா நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இலங்கை, வியட்நாம், நியூஸிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்துள்ள நிலையில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த நோயின் தாக்கம் வலுபெற்றே வருகிறது என்பது வேதனை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிற நாடுகளில் உள்ள மக்களை வந்தே பாரத் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி தாயகம் அழைத்து வருகின்றது இந்திய அரசு. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் மலேசிய அரசின் உதவியுடன் அங்குள்ள இந்திய மக்களை இந்தியாவின் கொச்சி, டெல்லி, சென்னை, திருச்சி, கோவை மற்றும் பெங்களூரூ ஆகிய இடங்களுக்கு அழைத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 2 குழந்தைகள் உள்பட 174 பேர் பயணம் செய்தனர். இந்த மாதம் 27ம் தேதி வரையிலான விமானங்களின் பட்டியலை அண்மையில் மலேசியாவில் செயல்படும் இந்திய உயர் கமிஷன் வெளியிட்டது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms