வந்தே பாரத் phase 7 : 181 பயணிகளுடன் திருச்சி நோக்கி பறந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்..!

Vande Bharath Trichy
Image tweeted by India in Malaysia

உலக அளவில் வுஹான் என்ற இந்த நாடு தற்போது மக்கள் தங்கள் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நகரித்தின் பெயர் என்றால் அது மிகையல்ல. ஒற்றை தொற்றாக உருவெடுத்த அந்த வைரஸ் இன்று உலக அளவில் பிறவி உள்ளது என்றால் இன்னும் உலகம் விஞ்ஞானத்தின் உச்சத்தை அடையவில்லை என்றே சொல்லலம். பலர் இதை வேண்டும் என்றே பரப்பப்பட்ட நோய் என்றும் கூறிவருகின்றனர். சிலர் 100 வருடங்களுக்கு ஒரு முறை பூமி தன்னை சுத்தம் செய்ய இயற்கை எடுத்த நடவடிக்கை என்று கூறுகின்றனர்.

ஆனால் ஆதாரம் இல்லாமல் இந்த பூவுலம் நம்பாது என்பதே நிதர்சனம்.

இதையும் படிங்க : “மீண்டும் கடும் உச்சத்தில் உள்ளூர் தொற்று” – ஒரே நாளில் 259 பேருக்கு உறுதியான கோவிட் 19..!

பல கோடி மக்களை வாட்டிவதைக்கும் இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டறியப்படாத நிலையில் 6 மாத பூட்டுதலுக்கு பிறகு மக்கள் வாழ வழியின்றி தற்காப்புடன் மீண்டும் தங்களது பணிகளை தொடங்கி நடத்தி வருகின்றனர். மலேஷியா மற்றும் இன்றி அண்டை நாடான இந்தியாவிலும் தற்போது ஊரடங்கு பல தளர்வுகளுடன் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த மாதத்திற்கான இந்தியாவின் வந்தே பாரத் திட்டம் நேற்று முதல் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று அக்டோபர் மாதம் 1ம் தேதி இந்திய தலைநகர் டெல்லி மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்கியது.

மலேசியாவில் இருந்து 181 பயணிகள் நேற்று இரவு 8 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தனர். 31ம் தேதி வரை மலேசியாவில் இருந் இந்தியாவிற்கு வந்தே பாரத் விமானங்கள் பறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் நேற்று முதல் திருச்சி, சென்னை மற்றும் இந்தியாவின் பல நகரங்களில் இருந்து விமானங்கள் மலேசியா நோக்கி பறக்க தொடங்கியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram