தமிழகத்தின் திருச்சியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இம்மாத சேவையை தொடங்கியுள்ளது. (Trichy to Kuala Lampur)
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மார்ச் மாத சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (Trichy to Kuala Lampur)
“எங்கள் வாழ்விற்கு வழி சொல்லுங்கள்” – மலேசிய திருமண ஏற்பாட்டாளர்கள் சங்கம்.!
தமிழகத்தில் இருந்து கோலாலம்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கான மார்ச் மாத பட்டியல் அண்மையில் வெளியானது.
தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து பல விமானங்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இம்மாதம் இயக்கப்பட உள்ளது.
மார்ச் 1ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை திருச்சியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு இயக்கப்பட உள்ளது.
மேலும் மார்ச் 1 முதல் அனைத்து திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 9.45 மணிக்கு திருச்சியில் இருந்து விமானங்கள் கோலாலம்பூர் புறப்படும்.
அதேபோல மார்ச் 1ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளது.
சென்னையில் இருந்து மார்ச் 1 முதல் 25 வரை அனைத்து வியாழக்கிழமைகளில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் கோலாலம்பூர் செல்லும்.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
* Telegram