COVID 19 – மலேசியாவில், சரவாக் பகுதியில் 8 பேருக்கு நோய் தோற்று..!!

noor hisham abdulla
Image Tweeted by Noor Hisham Adbullah

மலேசியாவில் கொரோனா குறித்து தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி) இன்று 15 பேர் புதிதாக கொரோனாவால் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் இது பாதிப்பு எண்ணிக்கையை 8815 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று மட்டும் 7 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 8562 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97.1 சதவிகிதமாக ஆக உள்ளது.

மேலும் இன்று நல்வாய்ப்பாக கொரோனா காரணமாக யாரும் மரணிக்காத நிலையில் கொரோனா காரணமாக மலேசியாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 123ஆக உள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 15 பேரில் 4 பேர் வெளிநாடுகளில் இருந்து மலேசியா திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சரவாக் பகுதியில் 8 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது அங்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/
?? Twitter      – https://twitter.com/malaysiatms