“மலேசியாவில் தொற்று முற்றிலும் நீங்கும் வரை கட்டுப்பாடு வேண்டும்” – முன்னாள் சுகாதார அமைச்சர்..!

CMCO in Malaysia
Picture Courtesy malay mail

மலேசியாவில் கொரோனா குறித்து தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி) நேற்று 10 பேர் புதிதாக கொரோனாவால் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் இது பாதிப்பு எண்ணிக்கையை 9267 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : Face Mask : “1000 ரிங்கிட் அபராதம்” – இந்த சட்டத்தில் எந்த மாற்றமும் தற்போது கொண்டுவர இயலாது..!

மேலும் இன்று மட்டும் 10 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 8959 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96.6 சதவிகிதமாக ஆக உள்ளது.

மேலும் இன்று கொரோனா காரணமாக மலேசியாவில் யாரும் மரணிக்காத நிலையில் இறந்தவர்களின் எண்னிக்கை 125ஆக உள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 10 பேரில் 8 பேர் வெளிநாடுகளில் இருந்து மலேசியா திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அமலில் இருக்கும் மீட்சிக்கான கட்டுப்பாடு வரும் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதியுடன் முடிவுக்கு வருகின்றது.

இந்நிலையில் இந்த கட்டுப்பாடு தற்போது மேலும் நீடிக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் சுகாதார அமைச்சர் திரு. டாக்டர் லீ பூன் சை அவர்கள். மலேசியாவில் தொற்று முழுமையாக நீக்கப்படும் வரை இந்த கட்டுப்பாடு நிச்சயம் அமலில் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms