சுங்கை உலார் தமிழ்ப்பள்ளி : “குத்தகைக்கு விட இது டூரியன் தோட்டமல்ல” – கருப்பையா.!

Tamil School Kedah
Photo Courtesy Tamil Malar

சுங்கை உலார் தோட்டத் தமிழ்ப்பள்ளி இடத்தை குத்தகைக்கு விட அது ஒன்றும் டூரியன் தோட்டமல்ல என்ற கருத்து தற்போது எழுந்துள்ளது. (Tamil School Kedah)

இந்த கருத்தினை பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எம். கருப்பையா தற்போது தெரிவித்துள்ளார். (Tamil School Kedah)

“வரிசையை முந்திச்செல்வோர்க்கு RM 50,000 அபராதம்” – அமைச்சர் ஆதாம் பாபா.!

குத்தகை அடிப்படையில் 3 ஆண்டுகள் இலவசமாக நிலத்தை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆதலால் குத்தைக்கு எடுக்க இது “டூரியன் தோட்டமல்ல” என்ற கருத்தினை எம். கருப்பையா அவர்கள் முன்வைத்துள்ளார்.

கெடா அரசு அம்மாநிலத்தில் உள்ள 85 ஆண்டுகள் பழமையான தமிழ் பள்ளிக்கு நிரந்திர நிலப்பட்டா வழங்காதது ஏன் என்ற கேள்வி முன்பே எழுந்தது.

பினாங்கு துணை முதல்வரும் பேராசிரியருமான ராமசாமி அவர்கள் இந்த குற்றச்சாட்டினை அப்போது முன்வைத்தார்.

உலகம் எங்கும் பரவியுள்ள நாடுகளில் பல இடங்களில் தமிழர்களின் பங்கீடு என்பது அதிகம். இதற்கு மலேசியாவும் விதிவிலக்கு அல்ல.

மலேசியாவை பொறுத்தவரை தமிழர்களின் பாரம்பரியம் என்பது 200 ஆண்டுகள் கண்டது நிற்கும் ஒன்று. தோட்டத்தொழில் அவர்கள் பங்கு அதிகம்.

சுங்கை ஊலார் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு, அம்மாநில அரசு மூன்று ஆண்டுகளுக்கு வாடைக்கு விடுவதற்கு பதிலாக நிரந்திர நிலப்பட்டா வழங்கலாம் என்றார் ராமசாமி.

இதுஒருபுரம் இருக்க வரவிருக்கும் 2021ம் ஆண்டிற்கான பட்ஜெட், கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

திரு. சிவகுமார் அவர்கள் அப்போது வெளியிட்ட அறிக்கையில். அறிவிக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில் தமிழ் மற்றும் சீன பள்ளிகளுக்கான தனிப்பட்ட பட்ஜெட் அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram