பின்னாங் மற்றும் சிலாங்கூர் – “இவ்வாண்டு தைப்பூசக் கொண்டாட்டங்கள் இல்லை.?”

Selangor Thaipusam 2021
File Twitter Image

மலேசியாவில் கொரோனா அச்சம் காரணமாக பின்னாங்கு மற்றும் சிலாங்கூர் பகுதியில் இவ்வாண்டு தைப்பூச திருவிழா தடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (Selangor Thaipusam 2021)

PHEB (Penang Hindu Endowment Board) தலைவர் டாக்டர். பி. ராமசாமி இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். (Selangor Thaipusam 2021)

ஒரே நாளில் 16 பேர் மரணம் – கூடுதல் கட்டுப்பாட்டிற்கு வாய்ப்பு.!

தேர் திருவிழாவின்போது மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவது கடினம் என்றும் மக்களின் நலனே தற்போது முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும் இது குறித்து விவாதித்து முடிவு எட்டப்படும் என்று டாக்டர் பி. ராமசாமி செய்தியாளர் சந்திப்பில் முன்னர் தெரிவித்தார்.

ஆனால் சிலாங்கூர் மற்றும் பின்னாங் பகுதியில் அதிக அளவில் தொற்று இருப்பதால், தைப்பூச கொண்டாட்டங்கள் அங்கு இல்லை என்று ராமசாமி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுக்க உள்ள ஹிந்து மக்களால் வெகு விமர்சயாக கொண்டாடப்படும் ஒரு நிகழ்வுதான் தைப்பூசம். மலேசியாவிலும் இந்த திருவிழா தை மாதத்தில் கொண்டாடப்படும்.

2020ம் ஆண்டு உலக சுகாதாரத்திற்கு அவசரநிலையை அப்போது பிரகடனம் செய்தது உலக சுகாதார மையம்.

திருவிழாக்கள், பொது நிகழ்ச்சிகள் என்று அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் மிகவும் கவனத்துடன் செய்யலப்பட அறிவுறுத்தியது.

இருப்பினும் வெகு விமர்சையாக உற்சாகத்துடன் தைப்பூசத்திருவிழா கொண்டாடப்பட்டது.

10 மாதங்கள் கடந்த நிலையில் தொற்றின் அளவு குறையாத காரணத்தால் பொது தடை இன்றளவும் மலேசியாவில் நீடித்து வருவது நம்மால் பார்க்கமுடிகிறது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram