மலேசியாவிகள் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்றின் எண்ணிக்கை புதிய உச்சம் தொட்டு வருகின்றது. (Selangor Coronavirus)
பல நாட்கள் கழித்து நேற்று மீண்டும் சிலாங்கூர் பகுதியில் அதிக அளவில் தொற்று காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 692 பேர் சிலாங்கூர் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். (Selangor Coronavirus)
“டிசம்பர் 31 – புக்கிங் தொடங்கியது” : KL to திருச்சி – திருச்சி to KL சிறப்பு விமானம்.!
அதே போல சபா பகுதி தொற்று எண்ணைக்கையில் இரண்டாம் இடத்தில் உள்ளது. சபா பகுதியில் 260 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் கோலாலம்பூரில் 197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஜோஹோர், பின்னாங், மலாக்கா ஆகிய பகுதிகளை தவிர பிற இடங்களில் தொற்றின் அளவு குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் கொரோனா குறித்து தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது.
இந்நிலையில் மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி) நேற்று 1683 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையை 90816 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்று மட்டும் 1214 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை மொத்தம் 75244 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (Selangor Coronavirus)
நல்வாய்ப்பாக இந்த நோயின் காரணமாக நேற்று யாரும் மலேசியாவில் இறக்காத நிலையில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்னிக்கை 432ஆக உள்ளது.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
* Telegram