“இதுவே அதிக அளவிலான தொற்று” – பீதியில் சிலாங்கூர் மக்கள்.!

Selangor Corona
Image tweeted by Noor Hisham Abdullah

இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் மலேசியாவில் 1882 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. (Selangor Corona)

மலேசியாவில் கடந்த சில நாட்களாக சபாவை பின்னுக்கு தள்ளி தொற்று எண்ணிக்கையில் முதல் இடம் பிடித்து வந்தது தலைநகர் கோலாலம்பூர். (Selangor Corona)

“சிங்கப்பூர் வரும் மலேசிய பயணிகள்” – இன்று முதல் அமலுக்கு வந்த புது விதி.!

இந்நிலையில் தலைநகரின் நிலைமை சரியடைய தொடங்கியுள்ளது. ஆனால் இப்பொது சிலாங்கூர் பகுதியில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் சிலாங்கூர் பகுதியில் 1203 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை பதிவான அளவில் இது மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் கொரோனா குறித்து தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது.

இந்நிலையில் மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி) நேற்று 1884 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையை 56659 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று மட்டும் 883 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை மொத்தம் 42480 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (Selangor Corona)

மேலும் இந்த நோயின் காரணமாக நேற்று 2 பேர் மலேசியாவில் இறந்துள்ள நிலையில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்னிக்கை 337ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா, நேபால் மற்றும் இந்தோனேஷியா ஆகிய பகுதிகளில் இருந்து மலேசியா வரும் மக்களால் இங்கு தொற்றின் அளவு சற்று உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொடர்ந்து கெடா, சிலாங்கூர், ஜோஹோர், சரவாக் மற்றும் மலாக்கா ஆகிய பகுதிகளிலும் சில தொற்று சம்பவங்கள் காணப்பட்டு வருகின்றது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram